உள்ளூர் செய்திகள்

கோப்புடம்.

அவினாசியில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கட்டிட பொருட்கள் திருட்டு

Published On 2022-11-07 11:21 GMT   |   Update On 2022-11-07 11:21 GMT
  • செந்தில்குமார் காவிலிபாளையத்தில் சொந்த கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
  • ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சென்டிங் சீட்டுகளை வாங்கி அடுக்கி வைத்திருந்தார்.

அவினாசி :

அவினாசியை அடுத்து வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது51) .இவர்காவிலிபாளையத்தில் சொந்த கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சென்டிங் சீட்டுகளை வாங்கி அடுக்கி வைத்திருந்தார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது அந்த சீட்டுகளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News