ஆடு திருடியவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
- 6 மாதங்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்றை பிரான்சிஸ் வளர்த்து வருகிறார்
- கடை முன்பு ஆட்டுக்குட்டியை கட்டி வைத்திருந்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ,மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சுமார் 6 மாதங்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது கடை முன்பு ஆட்டுக்குட்டியை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில்,கடைக்கு பொருள் வாங்குவது போல வந்த ஒருவர் பிரான்சிஸ் கடைக்குள் வேலையாக இருந்தபோது ஆட்டுக்குட்டியை நைசாக மோட்டார்சைக்கிளில் வைத்து திருடிச் சென்றார். பின்னால் அவரை தொடர்ந்து சென்று அவரை வழிமறித்து அங்குள்ள பொதுமக்களுடன் சேர்ந்து பிடித்து தர்ம அடி கொடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் பிடிபட்டவரிடம் விசாரணை செய்தபோது சூலூரை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ், (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.