உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் ஸ்ரீமகாலட்சுமி கோவிலில் குரு பூஜை விழா நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2022-08-18 07:26 GMT   |   Update On 2022-08-18 07:26 GMT
  • 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா நடக்கிறது.
  • காலை 7மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, ஸர்வ காயத்ரி ஹோமம் நடக்கிறது.

திருப்பூர் :

திருப்பூர் ஸ்ரீலட்சுமி நாராயண பீடம் ஸ்ரீமகாலட்சுமி கோவிலில் மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் அருளாசியுடன் 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

இதைெயாட்டி அன்று காலை 7மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அஷ்டதி ஹோமம், பஞ்சப்ரமே ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீ ஸூக்தம், புருஷஸூக்தம், மகாலட்சுமி, மிருத்யுஞ்ஜெய ஹோமம், ஸர்வ காயத்ரி ஹோமம் நடக்கிறது. காைல 9மணிக்கு மகா பூர்ணாஹூதி , 10மணிக்கு சுவாமிஜி தம்பதியர்களுக்கு கலசாபிஷேகம், 12மணிக்கு ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது. சிறப்பு பூஜைகள் புளியம்பட்டி பாலுசாமி, சுரேஷ்பாபு, திருப்பூர் பாஸ்கர் சாஸ்திரிகள், வேத மாதா காயத்ரி குழுவினர்கள் நடத்துகின்றனர்.

இக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்வாக்கு நடக்கிறது. மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று காலை 11மணி முதல் விளக்கு பூஜை நடக்கிறது. அன்னபிரசாதமும் வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News