உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நிறுத்திவைப்பு - கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு

Published On 2023-10-04 07:38 GMT   |   Update On 2023-10-04 07:38 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
  • பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும்

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பு:-

திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியன சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

இதனால், பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பா் 3 ஆம் தேதி முதல் மீண்டும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News