உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கண்காணிப்பு கேமரா பொருத்தம்

Published On 2022-11-22 12:31 IST   |   Update On 2022-11-22 12:31:00 IST
  • குற்ற தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
  • பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும்.

 பெருமாநல்லூர் : 

திருப்பூரில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணக்கம்பாளையம். இந்த நால் ரோடு சாலை மிகவும் முக்கியமான சந்திப்பு இடமாகும். பல பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இதை கருத்தில் கொண்டு குற்ற தடுப்பு நடவடிக்கையாக சுமார்ரூ .1 லட்சம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளதாக பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News