உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் மாநில மாநாடு : இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலோசனை

Published On 2022-07-06 08:29 GMT   |   Update On 2022-07-06 08:29 GMT
  • அடுத்த மாதம், 6 முதல் 9ந் தேதி வரை, கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளது.
  • மாநாட்டு நிறைவாக 9ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடக்கவுள்ள பேரணி நடைபெறும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவிநாசி :

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின், 25வது மாநில மாநாட்டு தயாரிப்பு பேரவை கூட்டம் அவிநாசியிலுள்ள குலாலர் திருமண மண்டபத்தில் நடந்தது.

மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், ஒன்றிய செயலாளர் சண்முகம், துணை செயலாளர்கள் கோபால், முத்துசாமி, பொருளாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.அடுத்த மாதம், 6 முதல் 9ந் தேதி வரை, கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளது.

இதில், கட்சியினர் பங்கேற்க வேண்டும். மாநாட்டு நிறைவாக 9ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடக்கவுள்ள பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News