உள்ளூர் செய்திகள்

திருமுருக தினேஷ்.

திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டணம் உயர்வு - சிவசேனா கண்டனம்

Published On 2023-11-14 15:46 IST   |   Update On 2023-11-14 15:46:00 IST
  • அபிஷேக கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி உள்ளனர்.
  • கந்த சஷ்டி விழா கோவில்கள் தோறும் நடைபெற்று க்கொண்டிருக்கிறது.

திருப்பூர்:

சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கந்த சஷ்டி விழா கோவில்கள் தோறும் நடைபெற்று க்கொண்டிருக்கிறது. கந்தசஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இந்து சமய அறநிலையத்துறையினர் அபிஷேக கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தியும், விஸ்வரூப தரிசன கட்டணத்தை ரூ.100 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தியும் செய்தி வெளியிட்டிருப்பது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. இந்து அறநிலையத்துறையினரின் செயலானது கடவுளை காட்சிப்பொருளாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பதாக உள்ளது.

அத்துடன் முக்கியமான விழாக்காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, அல்லது பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் இடங்களில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை கட்டுப்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு கட்டணத்தை அதிகப்படுத்தி பணம் சம்பாதிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்?. முக்கிய விழாக்காலங்களில் கோவில்களில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பது தெரிந்தும் தமிழக அரசு கண்டும் காணாதது மாதிரி நடந்து கொள்வதை சிவசேனா கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News