பூளவாடி நூலக வாசகா் வட்டத்துக்கு விருது
- பூளவாடி கிளை நூலகம் வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசு விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
- குழந்தைகளின் படைப்பு ஆக்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
உடுமலை :
உடுமலை வட்டம் பூளவாடி கிளை நூலகம் வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசு விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்த நூலகத்தில் சிறாா்களுக்காக பொம்மலாட்டம், கதை வட்டம், காகித பொம்மை செய்தல், விளையாட்டு மற்றும் குழந்தைகளின் படைப்பு ஆக்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இளம் வயது மாணவா்களிடம் வாசிப்பை நேசிக்க வைக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் மாநில அளவில் நூலக வளா்ச்சியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய 14 நூலகங்கள் தோ்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி விருதுகளை வழங்கினாா்.
இதில் உடுமலை வட்டம் பூளவாடி முழு நேர கிளை நூலகத்துக்கு மாநில அளவில் முனைப்புடன் செயல்பட்ட பூளவாடி கிளை நூலக வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசின் விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டன.வாசகா் வட்டத் தலைவா் சுப்பிரமணியன், செயலாளா் மற்றும் நூலகா் லட்சுமணசாமி ஆகியோா் இதனை பெற்றுக்கொண்டனா்.