உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்த பொதுமக்கள். 

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2022-07-04 10:47 GMT   |   Update On 2022-07-04 10:47 GMT
  • இந்த டவர் அமைந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கதிர்வீச்சால் பாதிக்கப்படுவார்கள்.
  • மயில்கள், குருவிகள் என பலவிதமான பறவைகள் வாழ்ந்து வருகினறன, அவை அனைத்தும் பாதிக்கப்படும்.

திருப்பூர் :

திருப்பூர் நல்லூர் புதுநகரில் 200 வீடுகள் உள்ளன. இங்கு மொபைல் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த டவர் அமைந்தால் 500 மீட்டர் சுற்றளவுக்கு கதிர்வீச்சு அதிகளவில் இருக்கும் .

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கதிர்வீச்சால் பாதிக்கப்படுவார்கள். பலவிதமான நோய்கள் தாக்கும் வாய்ப்பும் உள்ளது .மேலும் இந்த பகுதியில் மயில்கள், குருவிகள் என பலவிதமான பறவைகள் வாழ்ந்து வருகினறன. அவை அனைத்தும் பாதிக்கப்படும்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்தப் பகுதியில் மொபைல் டவர் அமைக்காமல்இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுநகர் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News