உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
விஷம் குடித்து விசைத்தறி தொழிலாளி தற்கொலை
- அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென வாயில் நுரையுடன் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
- பல்லடம் போலீசார் பழனிச்சாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் திடீரென வாயில் நுரையுடன் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது மனைவி சிவகாமி அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பழனிச்சாமி விஷம் குடித்து இருப்பதாகவும், ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் பழனிச்சாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.