உள்ளூர் செய்திகள்
- துணை மின் நிலையத்தில் வருகிற 4-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அவினாசி:
அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:- அவினாசி துணை மின் நிலையத்தில் வருகிற 4-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி, வேலாயுதம் பாளையம், உப்பிலிபாளையம், செம்பியநல்லூர், சின்னேரி பாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், ராக்கியாபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவினாசி கை காட்டிப்புதூர், சக்தி நகர், குமரன் காலனி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.