உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சாலையின் மையத்தடுப்பில் கட்சிக்கொடிகள் கட்டக்கூடாது - அனைத்து கட்சியினருக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

Published On 2022-08-22 13:36 IST   |   Update On 2022-08-22 13:36:00 IST
  • தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
  • கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.திருப்பூர் மாநகர பகுதியில் கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

ஆனால் மீண்டும் நடுவதாக புகார் எழுந்துள்ளது. கொடிக்கம்பங்களை கட்சியினர் அகற்றாவிட்டால் மாநகராட்சி சார்பில் அவை அகற்றப்படும். சாலையின் மையத்தடுப்பில் கட்சிக்கொடிகள் கட்டக்கூடாது. ரவுண்டானா பகுதியில் விளம்பர பதாகைகளை வைக்கக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது. வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சியினரிடம் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News