உள்ளூர் செய்திகள்
மாணவ -மாணவிகளின் ஓவிய படைப்புகளை படத்தில் காணலாம்.
குடிமங்கலம் அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி
- நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
- மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சித்திர கூடத்தில் ஓவிய கண்காட்சி நடந்தது. இதில் மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிமணி வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளின் ஓவிய படைப்புகளை பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் தியாகராஜன் செய்து இருந்தார்.