உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கிய காட்சி

கணக்கம்பாளையம் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு

Published On 2023-06-22 10:44 GMT   |   Update On 2023-06-22 10:44 GMT
  • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
  • எஸ்வி., புரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது.

உடுமலை,ஜூன்.22-

உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் எஸ்வி., புரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட திமுக., செயலாளர் இல .பத்மநாபன் முன்னிலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு ,ஒன்றிய செயலாளர் தங்கராஜ் ,ஒன்றிய குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் சங்கரன், ஐக்கிய கம்யூனிஸ்ட் மூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் ,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Tags:    

Similar News