உள்ளூர் செய்திகள்

இந்திரா சுந்தரம் மாணவிகளுக்கு சலங்கை வழங்கிய காட்சி.

இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில் பரதநாட்டியம் கற்கும் மாணவிகளுக்கு சலங்கைகள்

Published On 2022-09-22 08:10 GMT   |   Update On 2022-09-22 08:10 GMT
  • ஏழை மாணவிகளுக்கு ஆசிரியர் விஜய் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார்.
  • சலங்கைகள் வழங்கும் நிகழ்ச்சி துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

திருப்பூர் :

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதி ஊராட்சி பகுதியில் ஏழை மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் விஜய் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார். இதையறிந்த திருப்பூர் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் மாணவிகளுக்கு சலங்கைகள் வாங்கி கொடுக்க முடிவு செய்தார்.

இதன்படி சலங்கைகள் வழங்கும் நிகழ்ச்சி துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை தலைவர் இந்திரா சுந்தரம், துடுப்பதி ஊராட்சி தலைவர் அன்பரசு முன்னிலையில் 10 மாணவிகளுக்கு சலங்கைகளை இலவசமாக வழங்கினார். இதில் அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News