உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
- சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் படுகாயம் அடைந்தார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பல்லடம்:
பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 58). சம்பவத்தன்று இரவு பனப்பாளையம் பகுதியில் உள்ள கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் படுகாயம் அடைந்தார்.
அக்கம் - பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் நிஷாந்த் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.