நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு
- ரூ.115 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
- சாலை விரிவாக்க பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பல்லடம் :
திருப்பூர் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில், பல்லடம் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், வடிகால் கட்டுதல், தடுப்புச் சுவர் கட்டுதல், உள்ளிட்ட சாலை விரிவாக்க பணிகள் ரூ.115 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் ரமேஷ் கண்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை விரிவாக்க பணிகளை தரமாகவும், அதே நேரத்தில் விரைவாகவும், பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவிப் பொறியாளர் பாபு, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.