உள்ளூர் செய்திகள்

பெண்கள் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.

காங்கயத்தில் பெண்கள் சட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2023-11-23 07:13 GMT   |   Update On 2023-11-23 07:39 GMT
  • காங்கயம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண்கள் நல சட்டங்கள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முத்தூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரிலும் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள்ஆணைக்குழு வழிகாட்டுதலின் படியும், காங்கயம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண்கள் நல சட்டங்கள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரி முதல்வர் மல்லிகாதேவி தலைமை தாங்கினார். காங்கயம் வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்கள் ஜெகதீசன், பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த முகாமில் பெண்கள் நல சட்டங்களான வரதட்சணை தடை சட்டம், குழந்தைத் திருமண தடை சட்டம், சிறப்பு திருமண சட்டம், இந்திய விவாகரத்து சட்டம், மகப்பேறு நன்மை சட்டம், மருத்துவக் கருவுறுதல் சட்டம், வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், தேசிய மகளிர் ஆணைய சட்டம், சம ஊதிய சட்டம் பற்றியும் மாணவ மாணவிகளிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News