உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1451 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்

Published On 2023-06-04 04:38 GMT   |   Update On 2023-06-04 04:38 GMT
  • கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள்ஆக மொத்தம் 32,51,509 பயனாளிகள் பயன் பெறுகின்றனர்.
  • 2-6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு 50 கிராம் வீதம் ெகாழுக்கட்டை , கஞ்சி மற்றும் உருண்டையாக வழங்கப்படுகிறது.

திருப்பூர்:

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்தகுழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைமேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டம்.இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 0-6வயது குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள்ஆக மொத்தம் 32,51,509 பயனாளிகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டங்களை பயன்படுத்த வருமான வரம்பு ஏதுமில்லை. தகுதியுடைய அனைவரும் தங்கள்இல்லத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் (அங்கன்வாடி) பதிவு செய்துபயன் பெறலாம். 2 முதல் 6 வயது வரையிலான மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளுக்குஆடிப்பாடி விளையாடு பாப்பா பாடத்திட்டத்தின் படி விளையாட்டு மூலம் மாதம் ஒருதலைப்பின் மூலம் உடல், மனம், அறிவு, மொழி, சமூக வளர்ச்சியை உருவாக்கும் கல்விவழங்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு உணவூட்டுதல், கணவன்மார்களுக்கான விழிப்புணர்வு, பொதுசுகாதாரம் ஆகிய சமுதாய நிகழ்வுகள் மாதம் இரு முறை மையத்தில்நடத்தப்படுகின்றது.

தமிழக முதல்வர் முன்னோடி திட்டமானஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் பயனாளர்களான 0 மாதம் முதல்6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்குஇரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை மிதமானஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம்வழங்குவதும், மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையானஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு (56 நாட்களுக்கு) Ready to use Therapeutic Food வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினைமேம்படுத்துவதாகும். இத்திட்டமானது தமிழக முதல்-அமைச்சரால் 28-2-2023 அன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தினை அனைத்துமாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் திருப்பூர் மாவட்டகலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்குசிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை தமிழ்வளர்ச்சி மற்றும்செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 4.3.2023 அன்று துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 0 மாதம் முதல் 6 மாதம் வரை கடுமையானஊட்டச்சத்து குறைபாடுள்ள 451 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 902எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 0 மாதம் முதல் 6மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 549 குழந்தைகளின் தாய்மார்களுக்கு549 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும் என மொத்தம் 1451ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் 6 மாதம் முதல்6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2430 குழந்தைகளுக்கு Ready to use Therapeutic Food வழங்கப்பட்டுள்ளது. சத்துமாவு வழங்கபடும் அளவானது 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 125 கிராம் வீதம் மாதத்திற்கு 3.125 கி.கி., வழங்கப்படுகிறது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டு தாய்மார்களுக்கு தினமும் 150 கிராம் வீதம் மாதம் 3,750 கி.கி. வழங்கப்படுகிறது. 2-6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு 50 கிராம் வீதம் ெகாழுக்கட்டை , கஞ்சி மற்றும் உருண்டையாக வழங்கப்படுகிறது.

முட்ைட வழங்கப்படும் விதமானது 1-2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்தில் 3 முட்டை வீட்டில் வழங்கப்படும். 2-6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு வாரம் 3 நாட்கள் முட்டையுடன் மதிய உணவு குழந்தை மையத்தில் வழங்கப்படும். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 2 வயது வரை 60 கிராம், 2-6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 30 கிராம் வழங்கப்படுகிறது. இத்தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

Tags:    

Similar News