உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு வழங்கிய காட்சி. 

சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு

Published On 2023-11-11 11:34 GMT   |   Update On 2023-11-11 11:34 GMT
  • சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு வழங்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

சாமளாபுரம்:

கலைஞரின் நூற்றாண்டு விழா - தீபாவளி பண்டிகையையொட்டி சாமளாபுரம் தி.மு.க. பேரூர் செயலாளரும், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 5-வது வார்டு கவுன்சிலருமான பி.வேலுச்சாமியின் ஏற்பாட்டில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி ெதாடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு கவுன்சிலர் வினோஜ்தயாளன், 2-வது வார்டு பட்டீஸ்வரன், 10-வது வார்டு கனகசபாபதி, 4-வது வார்டு பிரதிநிதி கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News