உள்ளூர் செய்திகள்

சிதிலமடைந்த குடிநீர் குழாய்.

டெங்கு நோய் பரவும் அபாயம் - பெருமாநல்லூரில் குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை

Published On 2023-10-07 11:15 GMT   |   Update On 2023-10-07 11:15 GMT
  • தொட்டியில் இருந்து வெளியே வரும் தண்ணீர் பைப் துரு பிடித்து பல வருடங்கள் ஆகிறது.
  • இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.

பெருமாநல்லூர்:

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பால சமுத்திரம் அருகில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து வெளியே வரும் தண்ணீர் பைப் துரு பிடித்து பல வருடங்கள் ஆகிறது. இதுகுறித்து புகார் நோட்டில் எழுதி வைத்து 1 மாதம் ஆகிறது. இதுவரை அந்த பைப் மாற்றப்படாமல் உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த தண்ணீர் 9 பகுதிகளுக்கு செல்கிறது. அதாவது, கற்பகாம்பாள் நகர், லண்டன் சிட்டி, சி.எஸ்.ஐ. காலனி, பாலசமுத்திரம், பொடாரம்பாளையம், ஆதிதிராவிடர் காலனி மற்றும் பொடாரம்பாளையம் தொடக்க பள்ளிக்கும் இந்தத் தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள், பள்ளி மாணவ -மாணவிகள் நலன் கருதி உடனடியாக இந்த தண்ணீர் வடியும் கேட் வால்வு மற்றும் துரு பிடித்த பைப்பை புதுப்பித்து தர வேண்டும் என்று அப்பகுதியின் சமூக ஆர்வலரும், பா.ஜ.க. பிரமுகருமான குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News