உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

செல்போன் செயலி மூலம் மின் கணக்கீடு பணி

Published On 2023-10-10 07:03 GMT   |   Update On 2023-10-10 07:03 GMT
  • மின்கணக்கீட்டாளர் மொபைல் போனில் கணக்கீட்டு செயலியை பதிவேற்றிக்கொள்ளலாம்.
  • சி.டி., (கரன்ட் டிரான்ஸ்பார்மர்) மின் இணைப்புகளில் கணக்கீடு செய்யும் பணி இம்மாதம் தொடங்கியுள்ளது.

திருப்பூர்:

மின் வாரியம் சார்பில் ஆண்டுக்கு 6 முறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. மின் கணக்கீட்டாளர், மின் கணக்கீட்டு கருவியுடன் சென்று மின்மீட்டரில் உள்ள தகவலை பதிவு செய்கின்றனர். அலுவலகம் சென்று, ஆன்லைனில் பதிவு செய்கின்றனர். பின்னரே மின்நுகர்வோருக்கு மின் கட்டணம் எவ்வளவு என்பது தெரியவரும்.

மின் கணக்கீட்டு பணியை எளிதாக்கும் வகையில், மொபைல் செயலி மூலம் தற்போது மின் கணக்கீடு சோதனை முறையில் மேற்கொள்ளப்படுகிறது. மின்கணக்கீட்டாளர் மொபைல் போனில் கணக்கீட்டு செயலியை பதிவேற்றிக்கொள்ளலாம்.

ஆப்டிக்கல் கேபிள் எடுத்துச்சென்று, மின்மீட்டர் மற்றும் மொபைல்போனுடன் இணைத்தால் உடனுக்குடன் மின் பயன்பாடு, செலுத்த வேண்டிய கட்டண விவரம், மின்வாரிய இணையதளத்திலும், மின் நுகர்வோருக்கும் சென்றுவிடுகிறது.அனைத்து மாவட்டங்களிலும், முதல்கட்டமாக, சி.டி., (கரன்ட் டிரான்ஸ்பார்மர்) மின் இணைப்புகளில் கணக்கீடு செய்யும் பணி இம்மாதம் தொடங்கியுள்ளது. விரைவில் இதை முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News