உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவில் அருகே ஈச்சர் வேன் திருட்டு
- வாடகையை முடித்து கொண்டு வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் எதிர்புறம் வேனை நிறுத்துவது வழக்கம்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன ஈச்சர் வேனை தேடி வருகிறார்கள்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் மூர்த்தி (வயது 54). இவர் ஈச்சர் வேன் சொந்தமாக வைத்து, அதனை வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
மூர்த்தி வாடகையை முடித்து கொண்டு வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் எதிர்புறம் வேனை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வேனை நிறுத்தி உள்ளார்.
பின்னர் அடுத்த நாள் காலையில் வந்து பார்க்கும்போது வேனை காணவில்லை. இதனால் பதறிபோன மூர்த்தி, இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன ஈச்சர் வேனை தேடி வருகிறார்கள்.