உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே ரேசன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை
- ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
- கிருஷ்ணசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்துபாளையத்தில் செயல்பட்டு வரும் ரேசன் கடைக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு, வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார்.பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பல்லடம் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ம.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், மற்றும் வடுகபாளையம் ஊராட்சி துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன்,ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.