உள்ளூர் செய்திகள்

நவராத்திரி விழா வழிபாடு நடைபெற்ற காட்சி. 

திருப்பூரில் நவராத்திரி விழா வழிபாடு

Published On 2023-10-19 11:35 GMT   |   Update On 2023-10-19 11:35 GMT
  • தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
  • மகாலட்சுமி, மருமகள் சிவப்பிரியா, மருமகன்கள் கவுரி சங்கர், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் கே.பி.என்.காலனி 5-வது வீதியில் அமைந்துள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமியின் வீட்டில் 25-வது ஆண்டு நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதையொட்டி அவரது வீட்டில் 9 படிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்து கடவுள் சிலைகள், இயேசு, மாதா சிலை மற்றும் மும்மதத்தை குறிக்கும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மகாத்மா காந்தி, காமராஜர், அண்ணா, அம்பேத்கர், அப்துல்கலாம், அன்னை தெரசா, விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சிலை மற்றும் கம்பா நதியில் ஏகாம்பரேஸ்வரை ஏழவார்குழலி வழிபடும் சிலை, நவதுர்கை, சிவதாண்டவம், லலிதாம்பிகை தர்பார், சுருட்ட பள்ளீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். பூஜையில் விகாஸ் வித்யாலயா பள்ளி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி, அவரது மனைவி ராதா, மகன் மாதேஸ்வரன், மகள்கள் கவிதா, மகாலட்சுமி, மருமகள் சிவப்பிரியா, மருமகன்கள் கவுரி சங்கர், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News