உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

காங்கயத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் பரிசோதனை முகாம்

Published On 2022-11-07 09:07 IST   |   Update On 2022-11-07 09:07:00 IST
  • வட்டார சுகாதார ஆய்வாளா்கள் ரகுபதி, மணி, மோகன்ராஜ், காா்த்தி, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
  • அப்பகுதியைச் சோ்ந்த 140 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

காங்கயம்:

யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான ரத்தப் பரிசோதனை முகாம் காங்கயத்தில் நடைபெற்றது.

காங்கயம் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் முரளி, காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, காங்கயம் நகரின் 7வது வாா்டுக்கு உட்பட்ட காா்த்திகை நகா், எம்.பி.எம். நகா் ஆகிய பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சோ்ந்த 140 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பழனிசாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வட்டார சுகாதார ஆய்வாளா்கள் ரகுபதி, மணி, மோகன்ராஜ், காா்த்தி, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News