உள்ளூர் செய்திகள்

நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்ற காட்சி. 

லக்கமநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

Published On 2023-04-30 07:42 GMT   |   Update On 2023-04-30 07:42 GMT
  • பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
  • கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் 15 வது நிதி குழு மானியம் 2020- 23 திட்டத்தின் கீழ் பசுபதிபாளையம் கிராமத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி , காவலிபாளையத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி என மொத்தம் ரூ. 13 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் மேல்நிலை தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News