உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பளுதூக்கும் போட்டியில் காங்கயம் அரசு கல்லூரி மாணவா் சாதனை

Published On 2023-10-12 05:48 GMT   |   Update On 2023-10-12 05:48 GMT
  • காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா்.
  • மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

 காங்கயம்:

கோவையில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் என்ற தனியாா் அமைப்பு சாா்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா். இதில் 150 கிலோ எடையை தூக்கி 3ம் இடம் பிடித்தாா். கடந்த வாரம் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு 3ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.போட்டியில் வெற்றிபெற்ற மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

Tags:    

Similar News