உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காங்கயம் பகுதியில் இன்று அதிகாலை பலத்த மழை

Published On 2023-11-14 11:38 GMT   |   Update On 2023-11-14 11:38 GMT
  • தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.
  • காங்கயம் நகர பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் வழிந்து ஓடியது.

காங்கயம்:

தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் காங்கயம் நகர பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் வழிந்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நின்றது. மேலும் வாகனத்தில் செல்பவர்களுக்கு சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால், ரோடு சரியாக தெரியாததால் ஆங்காங்கே சிறிது நேரம் வாகனத்தை ஓரம் கட்டி பார்க்கிங் லைட்டை எரிய விட்டு நின்றனர். இந்த தொடர் மழையால் காங்கயம் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News