என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gangayan region"
- தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.
- காங்கயம் நகர பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் வழிந்து ஓடியது.
காங்கயம்:
தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் காங்கயம் நகர பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் வழிந்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நின்றது. மேலும் வாகனத்தில் செல்பவர்களுக்கு சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால், ரோடு சரியாக தெரியாததால் ஆங்காங்கே சிறிது நேரம் வாகனத்தை ஓரம் கட்டி பார்க்கிங் லைட்டை எரிய விட்டு நின்றனர். இந்த தொடர் மழையால் காங்கயம் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்
- குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கயம்:
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் நாளை 18-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.
வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம்.
தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.
ஊதியூா் துணை மின் நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்