உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞரணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 

பொங்கலூர் கள்ளிப்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை

Published On 2022-11-14 06:57 GMT   |   Update On 2022-11-14 06:57 GMT
  • துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  • திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கள்ளிப்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.ராஜசேகரன்,பொங்கலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொங்கலூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகு பிரசாத், துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News