உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்ட 470 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2023-04-23 07:19 GMT   |   Update On 2023-04-23 07:19 GMT
  • அந்த வழியாக மூட்டைகளுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா்.
  • அவரிடமிருந்து 470 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

திருப்பூர்:

திருப்பூா் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான காவல் துறையினா் திருநீலகண்டபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மூட்டைகளுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இது தொடா்பாக திருநீலகண்டபுரத்தை சோ்ந்த காா்த்திக் (வயது 32) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 470 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். 

Tags:    

Similar News