உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அனுப்பர்பாளையம்புதூரில் தேசிய தொழிலாளர் தின விழா பேரணி 17-ந்தேதி நடக்கிறது

Published On 2023-08-29 15:36 IST   |   Update On 2023-08-29 15:36:00 IST
  • பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது
  • செயல்தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார்.

திருப்பூர் : 

திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். செயல்தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார்.

வருகிற 17-ந்தேதி திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கருப்பராயன் கோவில் அருகிலிருந்து, விஸ்வகர்மா ஜெயந்தி - தேசிய தொழிலாளர் தின விழா பேரணி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 15 வேலம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும். பொதுக்கூட்டம் குறித்து தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News