உள்ளூர் செய்திகள்
அவினாசியில் நள்ளிரவில் பரபரப்பு - கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிப்பு
- பாபி சர்தாரிடமிருந்த ரூ. 5ஆயிரம் மற்றும் 20 இரும்பு ராடுகளை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
- இரவில் பாபி சர்தார் தங்கி இருந்த அறை கதவை 3 மர்ம நபர்கள் முகத்தை துணியால் மறைத்து தட்டி உள்ளனர்.
அவினாசி:
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பாபி சர்தார் (வயது 25). இவர் அவிநாசி மங்கலம் ரோட்டில் கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு இரவில் அவர் தங்கி இருந்த அறை கதவை 3 மர்ம நபர்கள் முகத்தை துணியால் மறைத்து தட்டி உள்ளனர்.
கதவை திறக்காததால் அந்த நபர்கள் சிமெண்ட் சீட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து பாபி சர்தார் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடமிருந்த ரூ. 5ஆயிரம் மற்றும் 20 இரும்பு ராடுகளை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.