உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

Published On 2022-09-10 05:46 GMT   |   Update On 2022-09-10 05:46 GMT
  • மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
  • இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் மாநில பொருளாளர் உமர் ஹாஜியார் கொடியேற்றி வைத்தார்.விழாவில் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது கலந்துகொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண யாத்திரையை மனித நேய மக்கள் கட்சி பாராட்டுகிறது. இந்தியாவின் பன்முக தன்மை, மதசார்பின்மை கொள்கைக்கு கடும் அச்சுறுத்தல் நிலவும் இந்த வேளையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்பது மிகவும் அவசியமானது .அவரது நடைப்பயண யாத்திரை மகத்தான வெற்றியை பெற வேண்டும். ராகுல்காந்தி ஆட்சிக்கு வரும் போது இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும். 3சதவீதம் உள்ளவர்கள் 50 சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் இடம் பிடித்துள்ளனர். நாட்டில் பிற்பட்டோருக்கும், மிகவும் பிற்பட்டோருக்குமான சமூக நீதி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அவர் அளிக்க வேண்டும். அதே போல் நீதிபதிகள் ரங்கநாதமிஸ்ரா, சச்சார் ஆகியோர் வழங்கிய அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.

இந்தியா என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல .அது மதம், மொழி,இனம்,பண்பாடு, கலாச்சாரம் என பலவற்றாலும் பலருக்குமான பன்முகதன்மை கொண்ட நாடு ஆகும். உலகில் மதசார்பின்மை கொள்கை கொண்ட நாடு ஆகும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் இருக்கும் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்த இஸ்லாமியர்களை வழக்கிலிருந்து விடுவித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News