உள்ளூர் செய்திகள்

பிணமாக கிடந்த தொழிலாளியை போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்ட காட்சி.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே பிணமாக கிடந்த தொழிலாளி - போலீசார் உடலை மீட்டு விசாரணை

Published On 2022-07-28 11:09 GMT   |   Update On 2022-07-28 11:09 GMT
  • ஜம்முனை ஓடை அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே ஏ.பி.டி. ரோடு ஜம்முனை ஓடை அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜு ( வயது 48) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது யாராவதுதாக்கியதில் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News