உள்ளூர் செய்திகள்

கராத்தே போட்டி நடைபெற்ற காட்சி.

திருப்பூரில் கராத்தே போட்டி

Published On 2022-07-31 08:23 GMT   |   Update On 2022-07-31 10:47 GMT
  • மாணவர்களுக்கு கலர் பெல்ட் தேர்வுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது.
  • கேரள மாநில தலைமை பயிற்சியாளர் மாதேஷ் தேர்வினை கண்காணித்தார்.

திருப்பூர் :

திருப்பூரில் இன்று ஹிரோசிஹா அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கலர் பெல்ட் தேர்வுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கராத்தே பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஹிரோசிஹா கராத்தே பயிற்சி பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கேரள மாநில தலைமை பயிற்சியாளர் மாதேஷ் தேர்வினை கண்காணித்தார். கேரளாவில் கடந்த மாதம் நடைபெற்ற கருப்பு பட்டை தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News