உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கழிவுநீர் தேங்குவதால் அவினாசி பொதுமக்கள் பாதிப்பு

Published On 2022-09-20 06:50 GMT   |   Update On 2022-09-20 06:50 GMT
  • எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது.
  • வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லலை.

அவினாசி :

அவினாசி சூளை பகுதியில் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் சாக்கடை நீர் குட்டைபோல் தேங்குவதால் பொதுமக்கள் பாதிககப்படுகின்றனர்.இதுகுறித்து எம்.பி.ஆர்.லேஅவுட் குடியிருப்புவாசிகள் கூறியதாவது:-

எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது. இதற்கு அருகில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அங்கு ள்ள நூற்றுகணக்கான வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லாததால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் எங்கள் எம்.ஆர்.பி.லேஅவுட் பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு சாக்கடை நீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் துர் நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களை தொற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிசை மாற்றுவாரியத்தினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News