உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

வெள்ளகோவிலில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

Published On 2022-07-28 12:02 GMT   |   Update On 2022-07-28 12:02 GMT
  • காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கணவன், மனைவி வேலைக்கு சென்று விட்டனர்.
  • வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் ( வயது 50) . இவரது மனைவி செல்வராணி . இருவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

பிறகு வேலை முடிந்து மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.இதை அறிந்த செல்வராணி பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணமும், வீட்டின் டேபிள் மேல் வைத்திருந்த செல்போனும் காணாமல் போனது தெரியவந்தது, இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இதேபோல் பச்சாபாளையத்தை சேர்ந்த கருணாகரன் மகன் மகேஸ்வரன் (30). இவர் வெள்ளகோவிலில் டெய்லராக வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை வீட்டின் முன் உள்ள குளியல் அறையில் வைத்து விட்டு செல்வது வழக்கம், அதேபோல் நேற்று சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து மகேஸ்வரன் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இரண்டு வீட்டில் திருட்டு நடந்துள்ளதால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News