உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விசைத்தறிகள் நவீனமானால் உற்பத்தித்திறன் 4 மடங்கு உயரும் விசைத்தறி சங்க செயலாளர் பேட்டி

Published On 2023-04-10 04:46 GMT   |   Update On 2023-04-10 04:46 GMT
  • தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
  • தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

மங்கலம் :

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறிகள் பல ஆண்டுகளாக நவீனப்படுத்தப்படாமல் உள்ளன.

இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:- பாரம்பரியமாக விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், போதிய வருவாய் இன்றி தறிகளை நவீனப்படுத்த முடியாமல் உள்ளனர். சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்த தறி ஒன்றுக்கு 1.35 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதன் மூலம் உற்பத்தி திறன் நான்கு மடங்கு அதிகரிக்கும். தமிழக அரசு சார்பில் விசைத்தறிகளை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு தறி ஒன்றுக்கு 50 சதவீதம் என 67,500 ரூபாய் மானியம் வழங்க உத்தேசித்துள்ளது.

முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 67.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக சட்டசபை மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்குவது போல் மத்திய அரசும் விசைத்தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்கினால் உற்பத்தி அதிகரித்து விசைத்தறி தொழில் வளர்ச்சி பெறும். விசைத்தறியாளர் வாழ்வாதாரம் மேம்ப மத்திய அரசு தறிகளை நவீனப்படுத்த மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News