உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
பல்லடம் அருகே சொகுசு காரில் குட்கா கடத்திய வாலிபர்
- பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சேரன் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் பாலாஜி(28) என்பதும், கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சப்ளை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள், அவைகளை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.