உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்

Published On 2023-06-02 12:08 GMT   |   Update On 2023-06-02 12:08 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன.
  • உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன. அதன்படி உடுமலை அரசு பள்ளி மாணவர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவர் விடுதி, தாயம்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி, குண்டடம் அரசு பள்ளி மாணவர் விடுதி, எலுகாம்வலசு அரசு பள்ளி மாணவர் விடுதி, சின்னக்காம்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதி, ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர் விடுதி, திருப்பூர் அரசு கல்லூரி மாணவர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவர் விடுதி, பல்லடம் அரசு கல்லூரி மாணவர் விடுதி, மடத்துக்குளம் அரசு பள்ளி மாணவர் விடுதி, அவினாசி அரசு பள்ளி மாணவர் விடுதி ஆகியவை மாணவர்களுக்காக உள்ளன.

இதுபோல் திருப்பூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு பள்ளி மாணவியர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவியர் விடுதி, தாராபுரம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவியர் விடுதி, முத்தூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, சின்னகாம்பட்டி அரசு பள்ளி மாணவியர் விடுதி ஆகியவை மாணவிகளுக்காக உள்ளன.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக 4 சீருடைகள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

பள்ளி விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதிச்சான்றிதழ், பெற்றோர் ஆண்டு வருமானம் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது இந்த சான்றிதழ்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் மாணவர்களுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News