உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு திட்டங்களை பெற கிரைன்ஸ் இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டுகோள்

Published On 2023-04-20 08:09 GMT   |   Update On 2023-04-20 08:09 GMT
  • அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெற திருப்பூர் சப்-கலெக்டர் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.

திருப்பூர், ஏப்.20-

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயி கள்இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்தி ட்டம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் (AGRI STACK) மூலமாக அரசின்நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வருவாய் கோட்ட த்தில் உள்ள விவசாயிகளின் விவரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால், வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவண ங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விவசாயிகள் விண்ணப்பி க்கும் வகையில் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆவணங்களுடன் தங்களது கிராம நிர்வாக அலுவலர்-உதவி வேளாண்மை அலுவலர்- உதவிதோட்டக்கலை அலுவலர்களை அணுகி கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துபயன் பெற திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார். கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆவணங்கள்ஆதார் அடையாள அட்டை, அலைபேசி எண், புகைப்படம் , வங்கி கணக்கு விபரம் , நில விபரங்கள் ஆகும்.

Tags:    

Similar News