உள்ளூர் செய்திகள்

மங்கலம் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க வந்த காட்சி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மங்கலம் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு

Published On 2022-08-25 05:39 GMT   |   Update On 2022-08-25 05:39 GMT
  • தி.மு.க.கிழக்கு மாவட்டம், திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் ஏராளமானோர் பஸ்கள் மூலமாக புறப்பட்டு சென்றனர்.

மங்கலம் :

தமிழக முதலமைச்சர் மு.௧.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி,நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

முன்னதாக நேற்று அவர் கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அங்கிருந்து காரில் இரவு திருப்பூர் வந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம்,பல்லடம்-வடுகபாளையத்தில் தி.மு.க.கிழக்கு மாவட்டம்,திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்க மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் மங்கலத்தில் இருந்து பஸ்கள் மூலமாக புறப்பட்டுச் சென்றனர்.இதில் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் மு.சகாபுதீன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன்,சுந்தரவடிவேல், திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் இடுவாய் ரவி, பாபு ,நூர்முகமது , திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முகமது ஜீனைத், சசி, திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணகுமார், முகமது உசேன், திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணியை சேர்ந்தவரும் ,மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினருமான முகமது இத்ரீஸ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகளான இடுவாய் சுரேஷ், குமார், மயில்சாமி, ராமாத்தாள், திருமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News