திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
- காலை 9மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடக்கும்.
- இறுதியாண்டு இளங்கலை படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் மட்டும் இம்முகாமில் பங்கேற்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் சார்பில் குமரன் கல்லூரியில் நாளை 4-ந்தேதி மெகா வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 9மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடக்கும் முகாமில் 40க்கும் மேற்பட்ட ஐ.டி., மற்றும் பிற துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள, 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு இளங்கலை படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் மட்டும் இம்முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகளுக்காக, பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி பஸ் இலவசமாக இயக்கப்பட உள்ளது.மேலும், விவரங்களுக்கு கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர்கள் 9942878094, 9790201617 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கல்லூரி முதல்வர் வசந்தி தெரிவித்தார்.