உள்ளூர் செய்திகள்
தி.மு.க. சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
- கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி.
- 10ம் வகுப்பு படிக்கும் 100 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருப்பூர் கே.வி.ஆர். நகர் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 100 குழந்தைகளுக்கு திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் ரமேஷ், பகுதி கழக துணை செயலாளர் பிரிண்டிங் ரமேஷ், 42 வது வட்ட பிரதிநிதிகள் செல்வக்குட்டி, காமாட்சி ,அவைத் தலைவர் மும்மூர்த்தி, துணை செயலாளர் பால்ராஜ், முனியாண்டி, ஓதியப்பன், இளைஞர் அணி நிர்வாகிகள் கார்த்திக் , சுஜீத்குமார், கணேசன், செல்லம்நகர் சிவா ,கே.வி.ஆர். நகர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.