உள்ளூர் செய்திகள்
கத்தரிக்காய் நேரடி கொள்முதல்- விவசாயிகள் மகிழ்ச்சி
- கத்திரிக்காய் பை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.900 வரை விற்பனை ஆகிறது.
- கத்திரிக்காய் விலை கட்டுப்படியாகும் நிலையில் உள்ளது
உடுமலை:
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செடிகளில் இருந்து விவசாயிகள் கத்திரிக்காய் அறுவடை செய்து வருகின்றனர்.கத்திரிக்காய் விலை கட்டுப்படியாகும் நிலையில் உள்ளது.
கோவை, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் பொள்ளாச்சி பகுதி வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். தினசரி மார்க்கெட்டில் 18 கிலோ கத்திரிக்காய் பை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.900 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.