உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

பல்லடத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்

Published On 2023-10-02 13:30 IST   |   Update On 2023-10-02 13:30:00 IST
  • வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பல்லடம்:

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல் வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதன்படி பல்லடம் வட்டாரம் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்

இந்த முகாமில், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சுகாதாரத்துறையினருக்கு வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறிகள் இருந்தால் அதற்கான உரிய சிகிச்சைகள் வழங்கவும் சுகாதாரத்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News