உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பழைய ஹால் மார்க் முத்திரை நகைகளை விற்க ஓராண்டு அவகாசம் வழங்க வியாபாரிகள் வேண்டுகோள்

Published On 2023-03-27 07:38 GMT   |   Update On 2023-03-27 07:38 GMT
  • 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
  • நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.

திருப்பூர் :

வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யும் தங்க ஆபரணங்களில் முக்கோ ண வடிவிலான ஹால்மார்க் முத்திரையுடன், 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவை இல்லாத தங்க ஆபர ணங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறி வித்துள்ளது.தங்கத்தின் தூய்மைக்கான சான்றிதழாக ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.

ஹால் மார்க்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தனித்துவ அடையாள எண் வழங்க ப்படுகிறது.இதில் 3 இலக்கங்கள் ஆங்கில எழுத்துக்களாலும், 3 இலக்கங்கள் எண் வடி விலும் இருக்கும். இந்த அடையாள எண் முன்பு நான்கு இலக்கங்களில் வழங்கப்பட்டது. ஏப்ரல் முதல் 6 இலக்க அடையாள எண் கட்டா யமாக்கப்பட்டு ள்ளது. பழைய நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.இது குறித்து தர நிர்ணயத்தினர் கூறுகையில், வரும் ஏப்ரல் முதல் தங்க ஆபரணங்களில் 6 இலக்கங்களை கொண்ட தனித்துவ அடையாள எண் இருக்க வேண்டும். அப்படி இல்லாத நகைகள் பறிமுதல் செய்யப்படும்.சம்மந்த ப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்தின் மீதும், விற்ப னையாளர்கள் மீதும் நட வடிக்கை மேற்கொள்ள ப்படும்.

பழைய நடைமுறை யில் ஹால்மார்க் முத்திரை மற்றும் 4 இலக்க எண்ணு டன் கூடிய தங்க ஆபரண ங்கள் விற்பனை யை முடிக்க கால அவகாசம் மார்ச் 31-ந் தேதி நிறை வடைகி றது என்றனர். நகை வியாபாரிகள் கூறுகையில், பழைய ஹால் மார்க் முத்திரை நகைகளை விற்பனை செய்ய ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதே சமயம் பழைய ஹால்மார்க் பதித்து விற்பனை செய்த நகை களின் தரத்துக்கு மக்களிடம் என்ன சொல்லப்போ கிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்றார். 

Tags:    

Similar News