உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காங்கயம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2022-09-26 06:33 GMT   |   Update On 2022-09-26 06:33 GMT
  • முருங்ககாட்டு தோட்டம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா்.
  • காலி தண்ணீா் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பா்களுடன் குளித்துள்ளாா்.

காங்கயம்:

திருப்பூா் நல்லூா்-சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் மகன் தீபக்பிரசாத் (வயது20). இவா் காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தாா்.

இந்நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று உடன் படிக்கும் கதிா் (19), நவீன் (19), பிரவீன் (19), தீபன் (22) ஆகியோருடன் நத்தக்காடையூா்-நஞ்சப்பகவுண்டன் வலசு, முருங்ககாட்டு தோட்டம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா்.

தீபக் பிரசாத்துக்கு நீச்சல் தெரியாது என்பதால், காலி தண்ணீா் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பா்களுடன் குளித்துள்ளாா். குளித்து முடித்துவிட்டு தண்ணீா் கேனை அவிழ்த்துவிட்டு கிணற்றில் இருந்து மேலே ஏறியபோது, நிலைத்தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளாா்.

இதையடுத்து உடன் இருந்த சக நண்பா்கள் காப்பாற்ற முயன்றுள்ளனா். ஆனால், அவா் அதற்குள் நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீபக் பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.இச்சம்பவம் தொடா்பாக காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News